மதுரையில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச்சென்றதாக திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை தாசில்தார் நகர் கல்லூரணி தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி காந்திமதி (70). இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இச்சம்பவம் தொடர்பாக காந்திமதி அளித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









