/
மதுரையில் வேலை பார்த்த வீட்டில் ரூ.1.80 லட்சம் திருடிய பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சையது நூர்தீன் மௌலானா(51). இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் மாயமானது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் மௌலானா வீட்டில் வேலை பார்த்த ராஜேஸ்வரி பணத்தை திருடியது தெரிய வந்தது. அதையடுத்து ராஜேஸ்வரியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







