மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 50 பவுன் நகைகள் திருட்டு: 6 மாதங்களுக்கு பின்னர் வழக்குப்பதிவு

மதுரை வெவ்வேறு சம்பவங்களில் 50 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸார் 6 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:42 am

மதுரை வெவ்வேறு சம்பவங்களில் 50 பவுன் நகைகள் திருடப்பட்டதாக போலீஸார் 6 மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மதுரை அண்ணாநகர்,தெற்குவாசல் காவல்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக பல்வேறு நகைத்திருட்டுகள் நடைபெற்றுள்ளன. புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் தற்போது வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்னா(49). இவர் கடந்த ஏப்ரல் மாதம் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்துநிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது 14 பவுன் நகையுடன் இவர் வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
சென்னை ஆழ்வார் திருநகரியைச்சேர்ந்தவர் அன்னச்சாமி(63). இவர் திருச்சி செல்லும் பேருந்தில் கடந்த நவம்பர் மாதம் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பையை  அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். பையில் 20 பவுன் நகைகள் இருந்ததாக அன்னச்சாமி புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தமறாக்கியைச் சேர்ந்தவர் சகானா(25). இவர் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை காண மே 1-ஆம் தேதி வந்துள்ளார். வண்டியூர் பகுதியில் அழகரை தரிசனம் செய்தபோது கூட்ட நெரிசலில் சகானா அணிந்துள்ள 6 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர்.
இந்தப்புகார்கள் தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அழகப்பன்நகர் பாரதியார் நகரைச்சேர்ந்தவர் தேன்மொழி(53). அவர் கடந்த மே 28-ஆம் தேதி அழகப்பன் நகர் ரயில்வே கடவு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தேன்மொழி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.