தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முன்னாள் எஸ்.ஐ கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:09 am IST

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாரின்பேரில் முன்னாள் சார்பு ஆய்வாளரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மதுரை ஆத்திகுளம் குறிஞ்சிநகர் பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் திரவியம் (69). காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாய் அளித்தப்புகாரின் பேரில் தல்லாகுளம் மகளிர் போலீஸார் திரவியத்திடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திரவியம் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.