மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பேராசிரியர் கொலை வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா, திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில்

News image
Updated On :14 மே 2018, 10:17 pm

DIN

பாளையங்கோட்டையில் பேராசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா, திருநெல்வேலி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பாளையங்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். இவரது மாமனார் கொடியன்குளம் குமார். இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி செந்தில்குமாரின் வீட்டுக்கு வந்த கும்பல் அங்கிருந்த கொடியன்குளம் குமாரை கொலை செய்ய முயன்றனர். அவர் தப்பியோடிய நிலையில் செந்தில்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த செந்தில்குமார் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன், ராக்கெட்ராஜா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் ராக்கெட்ராஜாவை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராக்கெட்ராஜா, பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே பேராசிரியர் செந்தில்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் ராக்கெட்ராஜாவை போலீஸார் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.
அப்போது 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் அனுமதி கோரினர். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரா, ராக்கெட் ராஜாவை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
முன்னதாக திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.