காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சாவு

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து

News image
Updated On :14 மே 2018, 12:09 am

DIN

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக, ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள எம்.சத்திரப்பட்டி கருவனூரைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (50). இவர், அப்பகுதியில் உள்ள பண்ணையில் கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்றுள்ளார். முதல் நாள் வீசிய காற்றில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத கச்சம்மாள் புல் அறுக்கச் சென்றபோது, அந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது கணவர் மலைச்சாமி அளித்த புகாரின்பேரில், எம்.சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.