உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள போலியப்பட்டியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உசிலம்பட்டி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் கல்யாணகுமார் ஆலோசனைப் படி, காவல் துறை ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலியப்பட்டியைச் சேர்ந்த சுப்பன் மகன் ஜெயக்குமார் (32), அய்யரதேவர் மகன் ராஜாதேவன்(45), ராமர் மகன் சந்திரன் (34) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 70 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!

பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

