/

எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் நாளை மின்தடை

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் புதன்கிழமை (மே 23) மின் தடை ஏற்படும்.

Updated On :21 மே 2018, 11:12 pm

உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் புதன்கிழமை (மே 23) மின் தடை ஏற்படும்.
இதுகுறித்து, உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயற்பொறியாளர் ரா.ரெஜினா ராஜக்குமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எழுமலை, சின்னக்கட்டளை துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக சின்னக்கட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், மங்கலரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கனவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல்லிக்குண்டும், பொம்மனம்பட்டி, கண்ணியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியக்கட்டளை, செட்டியபட்டி, கே.ஆண்டிபட்டி, விரணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சுலபுரம், உலைப்பட்டி, மல்லப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், உத்தப்புரம், கோடநாயக்கன்பட்டி, ராஜாக்கப்பட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.