வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நகர் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில், சார்பு ஆய்வாளர் பழனிச்சாமிக்கும், வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சார்பு-ஆய்வாளரை இருவரும் தாக்க முயன்றனாரம். இது குறித்து சார்பு-ஆய்வாளர் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாடிப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (21) மற்றும் எஸ்.பெருமாள்பட்டியைச் சேர்ந் மணிகண்டன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு
வானதி சீனிவாசன் குணமடைய மேலும் சில நாள்களாகும்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

