விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காவல் சார்பு-ஆய்வாளரை தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவர் கைது

வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :21 மே 2018, 1:08 am

வாடிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு-ஆய்வாளரைத் தாக்க முயன்றதாக இளைஞர்கள் இருவரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக, நகர் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில், சார்பு ஆய்வாளர் பழனிச்சாமிக்கும், வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சார்பு-ஆய்வாளரை இருவரும் தாக்க முயன்றனாரம்.  இது குறித்து சார்பு-ஆய்வாளர் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வாடிப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (21) மற்றும் எஸ்.பெருமாள்பட்டியைச் சேர்ந் மணிகண்டன்(20) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.