புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பைக்குகள் மோதல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாவு

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 1:10 am

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.
     மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர்  மதுரை வீரன் (45). நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், மதுரை வீரன் மற்றும் இவரது நண்பர் போஸ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அவ்வழியாக மானாமதுரையைச் சேர்ந்த சஞ்சீவி (42), அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது, மதுரை வீரன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில், மதுரை வீரன், போஸ் மற்றும் சஞ்சீவி, சண்முகப்பிரியா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
    உடனே, அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மதுரை வீரன் உயிரிழந்தார். இது குறித்து சஞ்சீவி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.