மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் மதுரை வீரன் (45). நாம் தமிழர் கட்சியின் கிளை பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில், மதுரை வீரன் மற்றும் இவரது நண்பர் போஸ் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அவ்வழியாக மானாமதுரையைச் சேர்ந்த சஞ்சீவி (42), அவரது மனைவி சண்முகப்பிரியா ஆகியோர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது, மதுரை வீரன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதியுள்ளது. இதில், மதுரை வீரன், போஸ் மற்றும் சஞ்சீவி, சண்முகப்பிரியா ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
உடனே, அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மதுரை வீரன் உயிரிழந்தார். இது குறித்து சஞ்சீவி அளித்த புகாரின்பேரில், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

