தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

திருமங்கலம் பகுதியில் தொடர் மழை: கண்மாய்கள் நிரம்பின

திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும்  தொடர் மழை காரணமாக, கண்மாய்கள் நிரம்பியுள்ளன.

Updated On :8 அக்டோபர் 2018, 8:01 am IST

திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும்  தொடர் மழை காரணமாக, கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், திருமங்கலம் தாலுகா பகுதிகளில் உள்ள 58 கண்மாய்களுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருமங்கலம் அம்மாபட்டி கண்மாய், புலியூர், புல்லமுத்தூர், தங்களாச்சேரி, தும்மக்குண்டு, சொக்கம்பட்டி ஆகிய 6 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து. மகிழ்ச்சியடைந்த இப்பகுதி விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகளை தொடங்கிவிட்டனர்.  இதில், அம்மாபட்டி கண்மாய் சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழை காரணமாக அடிக்கடி கரை  உடைந்து, விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ந்து பயிர்கள் சேதமாவதும், ஊருக்குள் தண்ணீர் புகுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்தது. எனவே, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் 6 மாதங்களுக்கு முன் கண்மாய் தண்ணீர் ஊருக்குள் புகாதவாறு ஒருபக்கம் தடுப்புச் சுவர் மட்டும் கட்டியுள்ளனர். 
ஆனால், வழக்கமாக கண்மாய் உடையும் பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் கண்மாய் உடைந்து விடாமல் தடுக்க அதிகாரிகள் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதேபோல், திருமங்கலத்தை அடுத்த பெரியபொக்கம்பட்டி கண்மாய் 2 நாள்களுக்கு முன் நிறைந்து, மறுகால் சென்றதில் சிறிய பொக்கம்பட்டிக்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. எனவே, பொதுப் பணித் துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தை சரிசெய்ய வேண்டும்  என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.