இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அஞ்சல் வார விழா: அக்.9-15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள்

அஞ்சல் வார விழாவை முன்னிட்டு அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் தெரிவித்துள்ளார்.

Updated On :8 அக்டோபர் 2018, 7:58 am IST

அஞ்சல் வார விழாவை முன்னிட்டு அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வடக்குவெளி வீதி தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி மு.நாகநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 முதல் 15 ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதன்படி செவ்வாய்க்கிழமை (அக்.9) உலக அஞ்சல் தினமாகவும், அக்.10 சேமிப்பு வங்கி தினமாகவும், அக்.11 அஞ்சல் ஆயுள் காப்பீட்டு தினமாகவும், அக்.12 தபால் தலை சேகரிப்பு நாளாகவும், அக்.13 வணிக வளர்ச்சி நாளாகவும், அக்.15 கடித தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளை தலைமை தபால் நிலையத்துக்கு வரவழைத்து, அஞ்சல்துறையின் பல்வேறு சேவைகளையும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டையும், பயனுள்ள பல சேமிப்புத் திட்டங்களையும் விளக்க திட்டமிட்டுள்ளோம்.
இதைத்தொடர்ந்து மதுரையின் மூத்த தபால்தலை சேகரிப்பாளர்களை அழைத்து பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம், வினாடி வினா போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளை அளிக்க உள்ளோம்.
அக்டோபர் 12 ஆம் தேதி அஞ்சல் ஊர்த்தி மூலம் நடமாடும் தபால்தலை கண்காட்சி அமைத்து பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளோம். 
இந்த நிகழ்வின்போது மாணவர்களின் புகைப்படத்துடன் "மை ஸ்டாம்ப்' உடனடியாக அச்சிட்டுத் தர உள்ளோம். சேமிப்பு தினத்தன்று புதிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை வழங்கவும், ஆயுள் காப்பீடு தொடர்பான பயனாளிகளின் குறைகளை களையவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
அக்டோபர் 15 ஆம் தேதி நிறைவு நாள் நிகழ்வில் அஞ்சல்துறையின் வணிக சேவைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.