பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தாட்கோ திட்டங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு

Published On :

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காகச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
 தாட்கோ வாயிலாக பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 
  நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு, துரித மின்இணைப்பு, தொழில் முனைவு,  இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு,  மருத்துவ மையம், ரத்தப் பரிசோதனை மையம் அமைத்தல், சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி, குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதி உதவி,  அரசுப் பணியாளர் தேர்வாணயம் குரூப் 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதி உதவி, பட்டயக் கணக்கர், செலவுக் கணக்கர், நிறுவனச் செயலர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
 பதினெட்டு முதல் 65 வயது வரையுள்ள, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் உதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பத்தில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
 மேலும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதற்கான கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படும்.  இத்தொகை விண்ணப்பங்களைப் பதிவு செய்ய பணியமர்த்தப்படும் பயிற்சி பெற்ற கணினி இயக்குபவருக்கு ரூ.30 மற்றும்  புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு ரூ.30 என பிரித்து என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.