வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

6,370  புகையிலை பாக்கெட்கள் பறிமுதல்

மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை

Updated On :25 பிப்ரவரி 2019, 7:42 am IST

மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை முனிச்சாலை கொல்லம்பட்டறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பன்னீர்செல்வம்(33). இவர் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6 ஆவது தெருவில் கடை நடத்தி வருகிறார். அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தெப்பக்குளம் போலீஸார், பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். 6 ஆயிரத்து 370 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.