மதுரையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடைசெய்யப்பட்ட, 6,370 புகையிலைப் பாக்கெட்டுகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மதுரை முனிச்சாலை கொல்லம்பட்டறைத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பன்னீர்செல்வம்(33). இவர் முனிச்சாலை இஸ்மாயில்புரம் 6 ஆவது தெருவில் கடை நடத்தி வருகிறார். அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீஸார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தெப்பக்குளம் போலீஸார், பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். 6 ஆயிரத்து 370 புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


