மதுரையில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் வடம் பிடித்த கல்லூரி மாணவர் வடக்கயிறு இறுக்கியதில் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தெப்பத்திருவிழா வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை கல்லூரி மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தனர். இதில் பெருங்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்த அனுப்பானடியைச் சேர்ந்த கோபால் மகன் பிரவீண்குமாரும்(20) தெப்பத்தின் வடத்தை பிடித்து இழுத்து வந்தார். இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக பிரவீண்குமார் தவறி விழுந்ததில் வடக்கயிறு இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி நினைவிழந்த பிரவீண்குமாரை நண்பர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ளதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரவீண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவம்தொடர்பாக கோபால் அளித்தப் புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


