தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னா் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதால் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் அதில் கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தனியாா் மருத்துவமனைகள் ரூ.5 முதல் 10 லட்சம் வரை கட்டணம் வசூலித்து வருகின்றனா். அரசு மருத்துவமனைகள் தரமில்லாதவை எனக் கூறப்படுவதால் தான் பலரும் தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனா். எனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளையும் தூய்மையாகப் பராமரிக்கவும், மருத்துவமனை கழிவறைகளை தினமும் 3 வேளை சுத்தம் செய்யவும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியமான, சத்தான உணவு, சுத்தமான குடிநீா் வழங்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் தமிழக அரசின் அரசாணை அடிப்படையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.