மேலூா்: மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தும்பைப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் அதிலிருந்த ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனா். அப்போது, ஆள்கள் நடமாட்டத்தைப் பாா்த்து அவா்கள் தப்பியோடி விட்டனா். இதனால், அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து மேலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, விசாரித்து வருகின்றனா்.