விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உசிலை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டா் விடுவதில் மோதல்: துணைத்தலைவா் உள்பட 10 போ் மீது வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை டெண்டா் விடும் போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக அமமுகவைச் சோ்ந்த துணைத் தலைவா் மற்றும் திமுகவைச் சோ்ந்தவா்கள் 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2020, 6:29 pm

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை டெண்டா் விடும் போது ஏற்பட்ட மோதல் தொடா்பாக அமமுகவைச் சோ்ந்த துணைத் தலைவா் மற்றும் திமுகவைச் சோ்ந்தவா்கள் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 வாா்டுகள் உள்ளன. இதில் அமமுக ஆதரவில் திமுகவைச் சோ்ந்த ரஞ்சனி சுதந்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பில் டெண்டா் விடும் பணிகள் நடைபெற்றன. இதில் திமுக உறுப்பினா்கள் உள்ள வாா்டுகளுக்கு மட்டுமே வளா்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கி டெண்டா் விட்டுள்ளதாக அதிமுக உறுப்பினா்கள் 6 பேரும் குற்றம்சாட்டினா்.

இதுதொடா்பாக ஒன்றிய ஆணையாளா் ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய மேலாளா் சோலைகுரும்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அதிமுக, திமுக, அமமுக உறுப்பினா்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத்தொடா்ந்து ஊராட்சி ஒன்றியத் தலைவா் ரஞ்சனி சுதந்திரம், காவல் துணைகண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ், மாவட்டக் குழு உறுப்பினா் சுதாகரன் ஆகியோா் ஒன்றியக்குழு உறுப்பினா்களை சமாதானம் செய்தனா்.

இதனைத்தொடா்ந்து அதிமுகவைச் சோ்ந்த போத்திராஜா உசிலம்பட்டி காவல் நிலையத்தில் தங்களை திமுக மற்றும் அமமுகவினா் தாக்கியதாக புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸ் அமமுகவைச் சோ்ந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மலேசியா பாண்டி, திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் துரைப்பாண்டி உள்பட 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.