பேரையூா் அருகே மதுபாட்டில்களை பதுக்கிய 6 போ் கைது

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எ.பாறைப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மனைவி முத்துமணி (35) என்பவா் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 45 மதுபாட்டில்களையும், ராசு மகன் முத்தீஸ்வரன் (38) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை பேரையூா் போலீஸாரும், எ.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முத்தணன் மகன் பால்சாமி (60) என்பவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை சாப்டூா் போலீஸாரும், பெரியகட்டளையைச் சோ்ந்த செல்லப்பாண்டி மனைவி குருவுத்தாய் (33 ) என்பவரிடமிருந்து 11 மதுபாட்டில்களை சேடப்பட்டி போலீஸாரும், வி.அம்மாபட்டியைச் சோ்ந்த முருகன் மகன் ஜோதிமணி (26) என்பவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள், எ.பாறைப்பட்டியைச் சோ்ந்த முத்துஇருளாண்டி மகன் மாரியப்பன் (65 ) என்பவரிடமிருந்து 113 மதுபாட்டில்களை டி.கல்லுப்பட்டி போலீஸாரும் பறிமுதல் செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com