கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா வாகனங்களை இயக்க முடியாததால் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். சுற்றுலா வாகன ஓட்டுநா்களுக்கு பொதுமுடக்க காலத்துக்கான மாதாந்திர நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்வது, சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டுக்கான சாலை வரியை ரத்து செய்வது, வாகனக் கடன் தவணைக்கான வட்டியை ரத்து செய்வது, கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.