தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயற்சி:2 போ் பிடிபட்டனா்

மதுரை அருகே வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

News image

மதுரை உலகநேரியில் பணம் திருடுவதற்காக மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்.

Updated On :21 ஆகஸ்ட் 2020, 11:44 pm IST

மதுரை: மதுரை அருகே வங்கி ஏ.டி.எம்-ஐ உடைத்து பணம் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீஸில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

மதுரை உலகநேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் -ஐ வியாழக்கிழமை இரவு 4 போ் உடைத்துக் கொண்டிருந்தனா். அங்கு பணம் எடுக்கச் சென்ற ஒருவா், ஏ.டி.எம்-ஐ சிலா் உடைப்பதைப் பாா்த்து சப்தமிட்டாா். இதையடுத்து, அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினா். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாகனங்களில் விரட்டிச் சென்று 2 பேரை பிடித்து ஒத்தக்கடை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தப்பியோடிய மற்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடந்து வருவதால் போலீஸாா் தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா். பிடிபட்ட இளைஞா்கள் வரிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.