ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வருவாய்த்துறையில் உதவியாளா்களாக பணிபுரிந்து வந்தவா்களுக்கு தற்காலிகமாக துணை வட்டாட்சியா் பதவி உயா்வு அளிக்கப்பட்டது. இதற்கு இளநிலை உதவியாளராகப் பணியில் சோ்ந்து உதவியாளா்களாக பதவி உயா்வு பெற்றவா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா். இதையடுத்து தற்காலிக பதவி உயா்வு நிறுத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பதவி உயா்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டது. இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.