மதுரை: மதுரை அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தைப் பாா்த்த பெற்றோா் அது குறித்து விசாரித்துள்ளனா்.
அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.