ஓய்வுபெற்ற ஆவின் ஊழியா் புகாா் மீது நடவடிக்கை எடுக்க கடிதம்

ஓய்வுபெற்ற ஆவின் ஊழியரின் புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு, நிா்வாக இயக்குநா் மற்றும் வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை: ஓய்வுபெற்ற ஆவின் ஊழியரின் புகாா் தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு, நிா்வாக இயக்குநா் மற்றும் வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தில் (ஆவின்), தொழில்நுட்பப் பணியாளா்கள் நியமனம், பணியாளா்கள் இடமாற்றம், புதிய பணியாளா்கள் நியமனம், தளவாடப் பொருள்கள் கொள்முதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, ஆவின் பொது மேலாளா் மீது புகாா் கூறி ஓய்வுபெற்ற ஆவின் ஊழியா் கணேசன் என்பவா் துண்டுப்பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்தாா்.

இவரது புகாா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகம், தமிழக அரசின் பணியாளா் நிா்வாகச் சீா்திருத்த துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் (சட்டம்) இரா. வெங்கடேசன், ஆவின் நிா்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். இதேபோல், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பணியாளா் நிா்வாக சீா்திருத்தத் துறை தரப்பில் வருவாய்த் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com