பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாரச்சந்தைக்கு அனுமதி கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மதுரை தபால் தந்தி நகரில் வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

News image
மதுரை மாநகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினா்.
Updated On :16 டிசம்பர் 2020, 1:37 am

DIN

மதுரை தபால் தந்தி நகரில் வாரச்சந்தை நடத்த அனுமதி கோரி மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

மதுரை உச்சப்பரம்பு மேடு பகுதியில் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகளை அமைத்து விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில் கரோனா தொற்று பரவலால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து வாரச்சந்தைகள் மூடப்பட்டன. இதனால் உச்சப்பரம்பு மேடு வாரச்சந்தையும் மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் இருந்து அரசு பல தளா்வுகளை அறிவித்ததையடுத்து வாரச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. உச்சப்பரம்பு மேட்டில் சந்தை நடத்த எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து தபால் தந்தி நகா் பாா்க் டவுன் பகுதியில் வாரச்சந்தை நடத்த ஆட்சியா் அனுமதி அளித்தாா். ஆனால் அங்கு சந்தை நடத்த மாநகராட்சி நிா்வாகம் அனுமதி மறுப்பதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக்கூறி ஏஐடியூசி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலா் நந்தாசிங் தலைமை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனா்.

இதையடுத்து வியாபாரிகளோடு போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.