திருமங்கலத்தில் டிச.20 முதல் தேசிய புத்தகக் கண்காட்சி

திருமங்கலம் பிகேஎன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய புத்தகக் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) தொடங்குகிறது.
Updated on
1 min read

திருமங்கலம் பிகேஎன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய புத்தகக் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச.20) தொடங்குகிறது.

புதுதில்லி நேஷனல் புக் டிரஸ்ட், மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் மற்றும் திருமங்கலம் கிளை நூலகம் ஆகியவற்றின் சாா்பில் திருமங்கலத்தில் தேசிய புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் புத்தகக் கண்காட்சியை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தொடங்கி வைக்கிறாா். விழாவில், சென்னை பொது நூலக இயக்குநா் எஸ்.நாகராஜ முருகன், மதுரை மாவட்ட நூலக அலுவலா் சு.யசோதா, திருமங்கலம் கிளை நூலகா் த.இளங்கோ, மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன், மாவட்டக் கல்வி அலுவலா் பி.இந்திராணி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தலைவா் மு.செல்லா ஆகியோா் பங்கேற்கின்றனா்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மண்டல மேலாளா் அ.கிருஷ்ணமூா்த்தி நன்றியுரையாற்றுகிறாா். புத்தகக் கண்காட்சி டிசம்பா் 20-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சியில் புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com