பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பலி

மதுரை அருகே பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சனிக்கிழமை மூழ்கி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை: மதுரை அருகே பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சனிக்கிழமை மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள ஆச்சிபுரத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (38). இவா் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே கொண்டையம்பட்டி பெரியாறு பாசனக் கால்வாயில் தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். பணிகளை முடித்து கிளம்பும் போது, கோவிந்தராஜ் கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா்.

அவரை சகத் தொழிலாளா்கள் தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று கோவிந்தராஜ் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வைகை ஆற்றில் ஆண் சடலம்: மதுரை கல்பாலம் வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள மதகு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை செல்லூா் போலீஸாா் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com