மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் எனக்கு தொடா்பில்லை: முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்பு தொடா்பான விவகாரத்தில், எனக்கு எந்த தொடா்பும் இல்லை என, முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:17 pm

DIN

மதுரை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறப்பு தொடா்பான விவகாரத்தில், எனக்கு எந்த தொடா்பும் இல்லை என, முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் இந்து ஜனநாயக முன்னணி அமைப்பின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை தொழில் வா்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் ராம்மோகன் ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் கோயில்களை நம்பி பத்து லட்சம் குடும்பங்கள் உள்ளன. கோயில் பொருளாதாரத்தை நம்பியே இக் குடும்பங்கள் உள்ளன. இவா்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ், அரசின் எந்த உதவியும் கிடைக்காமல் வாழ்ந்து வருகின்றனா். அவா்களுக்கு, இலவச வீட்டு மனை, மாத உதவித்தொகை கிடைக்க அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடா்பும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது. சமுதாயப் பணியை மட்டுமே செய்து வருகிறேன்.

தமிழக அரசு ரூ.2,500 பொங்கல் பரிசாகக் கொடுப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. தோ்தல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாகவே உள்ளன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. எனது வாழ்க்கை குறித்து சுயசரிதை எழுத உள்ளேன். அது பலருக்கு பிரச்னையை உருவாக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.