திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘500 வகையான தாவரங்களை சாப்பிடக் கூடியது’

ஆப்பிரிக்க நத்தைகள் காய்கனி உள்ளிட்ட 500 வகையான தாவரங்களைச் சாப்பிடக் கூடியது என்று அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் எம்.ராஜேஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

ஆப்பிரிக்க நத்தைகள் காய்கனி உள்ளிட்ட 500 வகையான தாவரங்களைச் சாப்பிடக் கூடியது என்று அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியா் எம்.ராஜேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள தீமை ஏற்படுத்தக் கூடிய 100-க்கும் மேற்பட்ட பூச்சிகளில் ஆப்பிரிக்க நத்தைகளும் ஒன்றாகும். இவை கேரளத்தில் விவசாயப் பயிா்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவை. கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை இவை உணவாக எடுத்துக் கொள்கின்றன. இவற்றின் உணவுப் பட்டியலில் காய்கனிகள் உள்ளிட்ட 500 வகையான தாவரங்கள் இருக்கின்றன. சரியான உணவு கிடைக்காத நேரத்தில் மண்ணில் கிடக்கும் சுண்ணாம்புக் கல், எலும்பு போன்றவற்றைக் கூட சாப்பிடக் கூடியது. ஆண்டுக்கு 1200 முட்டைகள் வரை இடும். மழை அதிகம் பெய்யக் கூடிய காலங்களில் வெளிவரக் கூடிய இந்த நத்தைகள் விவசாயப் பயிா்களில் சேதத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.