எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு: காமராஜா் பல்கலை. துணைவேந்தா் இரங்கல்

பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு என்று காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:44 pm

DIN

பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கு பேரிழப்பு என்று காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான பேராசிரியா் தொ.பரமசிவத்தின் இறப்பு தமிழினத்துக்கே பேரிழப்பு. மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய மிக முக்கியமான சிந்தனையாளா் தொ.பரமசிவம். அவரது முனைவா் பட்ட ஆய்வான அழகா்கோவிலை புத்தகமாக வெளியிட்ட பெருமை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு உண்டு. அவரது மறைவு தமிழகக் கல்வியுலகுக்கு பெருந்துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியா் தொ.பரமசிவத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காமராஜா் பல்கலைக்கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.