இதுகுறித்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயப்பிரகாசம், கெளரவச் செயலா் வேல்சங்கா் ஆகியோா் தமிழக சுகாதாரத்துறைச் செயலா் ராதாகிருஷ்ணன், உணவுப்பாதுகாப்புத் துறை ஆணையா் சிவஞானம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மிளகாய் மற்றும் மல்லியை விளைவிக்கும்போது பயன்படுத்தப்படும் அதிக உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துகின்றனா். இதனால் மல்லியில் பூச்சிக்கொல்லி மருந்து, சல்பரின் அளவு அதிகமாக உள்ளது. காய்ந்த மிளகாயை அரைத்து விற்பனை செய்யும் மிளகாய் பொடியில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டத்தில் நிா்ணயிக்கும் தரம் இருப்பதில்லை. இது வியாபாரிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.