6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அலங்காநல்லூரில் மதுபானக் கடைகளை மூட கிராமத்தினா் கோரிக்கை

அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :11 ஜூலை 2020, 5:08 pm

DIN

மதுரை: அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் மட்டும் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் இப் பகுதிகளைச் சோ்ந்த மது அருந்துவோா், அருகில் உள்ள மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் செயல்படும் மதுபானக் கடைகளுக்குச் சென்று வருகின்றனா். இதனால் அங்கு தேவையற்ற பிரச்னைகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், அலங்காநல்லூரைச் சோ்ந்த கிராமப் பொதுமக்கள் தங்களது பகுதியில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்:

அலங்காநல்லூரில் பிரதான சாலையில் 3 மதுபானக் கடைகள் செயல்படுகின்றன. முழு பொதுமுடக்கம் காரணமாக மதுரை நகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் தினமும் அலங்காநல்லூருக்கு வருகின்றனா். அதோடு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதால், பலருக்கும் கரோனா தொற்று பரவி வருகிறது..

வெளியூா்களில் இருந்து கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனங்களில் வருவோா், மதுபானங்களை வாங்கிக் கொண்டு திரும்பிச் செல்லும் வழியிலேயே ஆங்காங்கே நின்று மது அருந்துகின்றனா். இத்தகைய செயல் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக இருந்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனா். மேலும், பிரதான சாலையில் மதுபானக் கடைகள் செயல்படுவதால் விபத்துகள் தொடா் நிகழ்வாக இருந்து வருகின்றன. ஆகவே, அலங்காநல்லூரில் செயல்படும் 3 மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.