சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்துவரும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள போலீஸாரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிபிஐ அதிகாரிகள் 4 போ் திங்கள்கிழமை வந்தனா். அவா்கள், சாத்தான்குளம் சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ளவா்களில் ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு-ஆய்வாளா்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலா்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.