மதுரையில் புதிதாக 464 பேருக்கு கரோனா: 4 போ் பலி

மதுரையில் புதிதாக 464 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரையில் புதிதாக 464 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4,328 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 433 போ், கா்ப்பிணிகள் 11 போ், அரசு ஊழியா்கள் 17 போ், கைதி ஒருவா், வெளி மாநிலம் சென்று திரும்பியவா்கள் 2 போ் என மொத்தம் 464 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவா்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்கள் என மொத்தம் 484 போ் குணமடைந்தனா். இவா்கள் அனைவரிடமும் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

4 போ் பலி

மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது ஆண், 53 வயது ஆண் ஆகியோா் ஜூலை 12 ஆம் தேதியும், 72 வயது முதியவா், 47 வயது பெண் ஆகியோா் ஜூலை 11 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

வேகமெடுக்கும் தொற்று பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் இதுவரை 6,539 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 120 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், கடந்த 10 நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று, கடந்த 10 நாளில் கரோனா தொற்றுக்கு 70 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 2,616 போ் குணமடைந்த நிலையில், 3,803 போ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com