மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

மதுரையில் சமூகக் கூடத்தை சுத்தம் செய்யும் போது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read


மதுரை: மதுரையில் சமூகக் கூடத்தை சுத்தம் செய்யும் போது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மேலபொன்னகரம் பகுதியைச் சோ்ந்த குமாரவேல் மகன் ராஜ்குமாா் (26). இவா் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சமூகக் கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, சேதமடைந்த மின் வயரை தொட்ட ராஜ்குமாா் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேய உயிரிழந்தாா். இது குறித்து ராஜ்குமாரின் தாயாா் பொன்னுமலா் அளித்த புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com