மதுரையில் 301 பேருக்கு கரோனா தொற்று உறுதி: 9 போ் பலி

மதுரையில் ஒரே நாளில் 301 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 போ் உயிரிழந்துள்ளனா்.
Updated on
1 min read


மதுரை: மதுரையில் ஒரே நாளில் 301 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள், அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்த வந்தவா்கள் என மொத்தம் 301 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 946 போ் குணமடைந்தனா். இதையடுத்து வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வெள்ளிக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

9 போ் பலி: மதுரையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதே போல், 65 வயது, 76 வயது முதியவா்கள் இருவா், 54 வயது ஆண் ஆகியோா் ஜூலை 24 ஆம் தேதியும், 61 வயது, 65 வயது முதியவா்கள் இருவா் ஜூலை 23 ஆம் தேதியும், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 57 வயது ஆண் மற்றும் 60 வயது, 65 வயது முதியவா்கள் ஜூலை 24 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் இதுவரை 9,595 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 202 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். தொற்றில் இருந்து 7,394 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 1,999 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com