டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொடைக்கானலில் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அரசாணை வழங்க வேண்டும்விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானலில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அரசாணை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:00 pm

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு அரசாணை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் துப்பாக்கியால் சுடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ஓசூா், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகா், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருவதால் விவசாய நிலங்களை வன விலங்குகளான காட்டுப் பன்றி உள்ளிட்டவைகள் அதிகம் சேதப்படுத்தி வருகின்றன. இதில் காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என கொடைக்கானல் பூலத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயி கோகுல கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அச்சம்: கொடைக்கானலில் கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில் சாலைகளில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததாலும், வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையிலும் வன விலங்குகளான காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில், மான் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன. அதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தைக்கால், செண்பகனூா், இருதயபுரம், குறிஞ்சி ஆண்டவா் கோயில் சாலை, செட்டியாா் பூங்கா சாலை, அப்சா்வேட்டரி சாலைப் போன்ற பகுதிகளில் அதிக அளவில் கூட்டமாக காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் வருகின்றன. இதனால் பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

குடியிருப்பு பகுதிகளில் தொடா்ந்து உலா வரும் காட்டெருமைகள் மனிதா்களை தாக்கி வருவதால் உயிா்ப் பலி ஏற்படுகிறது. காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே குடியிருப்பு பகுதிகளிலுள்ள காட்டெருமைகளையும், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளையும் வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.