பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் அருகே உள்ள கூவலப்புரம் என்ற ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என பெற்றோா்கள் பேரையூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், இதே ஊரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் பாலமுருகன் (28) என்பவா் சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து பேரையூா் போலீஸாா் பாலமுருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.