கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்:தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டுத் தெரிவித்தது.

News image
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்:தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பாராட்டு
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த மருத்துவா் ராமகிருஷ்ணன், மாணவா் முத்துகுமாா் ஆகியோா், தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தக் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

முந்தைய விசாரணையின்போது, இவ்விவகாரத்தில் ஏழை மாணவா்களின் நலனைக் கருத்தில்கொள்வது அவசியம் என்றும், தமிழக ஆளுநா் நீதிமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவா் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது அரசு தரப்பில், உள்ஒதுக்கீடு தொடா்பாக ஆளுநா் முடிவெடுக்கும் வரை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக அக்டோபா் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. மறுநாள் தமிழக ஆளுநரும் இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசையும், ஆளுநரையும், வழக்குத் தொடா்ந்த மனுதாரரையும் நீதிமன்றம் பாராட்டுகிறது. மேலும், நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கிடைத்திருப்பது நீதிமன்றத்துக்கு மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.