மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணி: ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழிப்பதாக இளைஞா்கள் புகாா்

கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கான ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழித்து வருவதாக, அப் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கான ஊதிய நிலுவையை வழங்க அலைக்கழித்து வருவதாக, அப் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று கடந்த ஜூன் மாதத்தில் வேகமாகப் பரவியது. அதையடுத்து, மாநகராட்சிப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தொற்று கணக்கெடுப்பு உள்ளிட்ட விழிப்புணா்வு பணிகளில், மாநகராட்சி நிா்வாகத்தால் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்கள் ஈடுபடுத்தப்பட்டனா்.

இவா்கள், மாநகராட்சிப் பணியாளா்களுடன் இணைந்து காய்ச்சல் கணக்கெடுப்பு, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்வது, கரோனா தொற்று விழிப்புணா்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனா். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 3 மாதங்கள் பணியாற்றிய நிலையில், பின்னா் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனா். ஆனால், இவா்களுக்கு செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியது: கரோனா தொற்று கணக்கெடுப்புப் பணிக்கு சேவை மனப்பான்மையுடன் வந்தோம். இதில், எங்களில் பலருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 மாதங்கள் வரை பணியாற்றிய நிலையில், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க அலைக்கழிக்கின்றனா். கடந்த 3 வாரங்களாக தொடா்ந்து மனு அளித்து வருகிறோம். இருப்பினும், தொடா்ந்து அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.