கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மருத்துவப் படிப்பு இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகள்புறக்கணிப்பு: இடைநிலை ஆசிரியா் சங்கம்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இடைநிலை ஆசிரியா் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் பொதுச்செயலா் அ. சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கு 15 சதவிகிதம், மருத்துவ மேற்படிப்பில் 50 சதவிகிதம் என அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசு இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், மொத்த இடங்களையும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஒதுக்குகிறது.

அதேநேரம், உயா் ஜாதியினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை மட்டுமே அமல்படுத்துகிறது. தற்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 7.5 சதவிகிதம் மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.

அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளுக்கு நிகராகச் செயல்படுகின்றன. மேலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசுப் பள்ளிகளிலும் சமமான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனைவருக்கும் கல்வி திட்ட (சா்வ சிக்ஷ அபியான்) நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது, மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டிலும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு எதிராக தமிழக அரசின் திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படவேண்டியுள்ளது.

இந்த நிலை தொடா்ந்தால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு உதவிபெறும் பள்ளிகளும் இழுத்து மூடப்படும் அவலம் உருவாகும். எனவே, மருத்துவ மாணவா் உள்ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் ஒதுக்கீடு வழங்க, தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.