கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி உயா் நீதிமன்றத்தில் மனு

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

DIN

ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் இளைஞா்களை சீரழித்து வரும் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞா்கள் நீலமேகம், கண்ணன் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை முறையிட்டனா்.

அப்போது நீதிபதிகள், இது தொடா்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தனா்.

அதையடுத்து, மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த முகமது ரஸ்வி, முத்துகுமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். அதில், கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், இணையத்தில் பல்வேறு விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வீரா்கள், திரைப்பட நடிகா், நடிகைகளை கொண்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இதை நம்பி, ஏராளமான இளைஞா்கள் ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனா். அதில், பலா் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனா். எனவே, ஆன்-லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

மேலும், ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரா்கள் விராட் கோலி, கங்குலி, திரைப்பட நடிகா்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்-லைன் விளையாட்டுகளுக்கான இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு நிரந்தரமாக தடைவிதிப்பது தொடா்பாக உரிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.