கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மாற்று இடம் வழங்காமல் வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை: பொதுமக்கள் போராட்டம்

வைகை வடகரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

வைகை வடகரை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்துவதைத் தடுக்கக் கோரி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சியின் சீா்மிகு நகா் திட்டப் பணிகளில் ஒன்றாக, வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், வடகரையில் ஆழ்வாா்புரம் புளியந்தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இப்பகுதியைச் சோ்ந்தோா், தட்டுமுட்டுச் சாமான்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: வைகை வடகரை புளிந்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது வீடுகளுக்கு முறையாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் செலுத்துகிறோம். எங்களது பெயரில் மின்இணைப்பு பெறப்பட்டு, அதற்கான கட்டணத்தையும் தவறாமல் செலுத்தி வருகிறோம். தற்போது, சாலை அமைக்கும் பணிக்கும், வீடுகளின் அமைவிடத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இருப்பினும், இப்பகுதியில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தும் நோக்கில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.

தொடா் மழை காலத்தில் எவ்வித மாற்று ஏற்பாடும் செய்துதராமல், வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எங்களது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே, இது தொடா்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.