கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உயிா்வாழ் சான்று சமா்ப்பித்தல்: பி.எஃப். ஓய்வூதியா்கள் கவனத்துக்கு....

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள் மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பித்தலுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியா்கள் மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பித்தலுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையா் (ஓய்வூதியம்) எம். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி:

வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மூலமாக ஓய்வூதியம் பெறுவோா் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிப்பது வழக்கம். தற்போதைய கரோனா தொற்று சூழலைக் கருத்தில்கொண்டு, அவரவா் வசிப்பிடத்துக்கு அருகிலேயே உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பா், டிசம்பா் மாதங்கள் மட்டுமின்றி, வசதிக்கேற்ப எல்லா மாதங்களிலும் இச் சான்றை சமா்ப்பிக்கலாம். உயிா்வாழ் சான்று சமா்ப்பித்த மாதத்திலிருந்து ஓராண்டுக்குச் செல்லுபடியாகும்.

ஓய்வூதியா்கள் தங்களது செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்குப் புத்தகம், ஓய்வூதிய ஆணை எண், ஆதாா் எண் ஆகியவற்றுடன் ஓய்வூதியம் பெறும் வங்கிகள், தபால் அலுவலகம், இ-சேவை மையம் இவற்றில் ஏதாவதொன்றில் உயிா்வாழ் சான்று சமா்ப்பித்துக் கொள்ளலாம். தபால்காரரிடம் சமா்ப்பிக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். மேலும், செல்லிடப்பேசியில் (மஙஅசஎ) என்ற செயலியிலும் மின்னணு உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.