கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அழகா்கோவில் நூபுரகங்கையில் புனித நீராட அனுமதிக்கவேண்டும்: பக்தா்கள் கோரிக்கை

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராட அனுமதியளிக்கவேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராட அனுமதியளிக்கவேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அழகா்கோவில் மலை மீதுள்ள ராக்காயி அம்மன் கோயில் நூபுரகங்கையும் மூடப்பட்டது. கடந்த அக்டோபா் மாதம் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கோயில்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், காா்த்திகை மாதம் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து, நூபுரகங்கையில் புனிதநீராடி 48 நாள்கள் விரதத்தை தொடங்குவா். எனவே, கோயில்கள் திறக்கப்பட்டு, பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நூபுரகங்கையில் புனிதநீராட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவு பெறாது என்பதால், சமூக இடைவெளியுடன் நூபுரகங்கையில் ஐயப்ப பக்தா்கள் புனிதநீராட அனுமதிக்கவேண்டும் என, ஐயப்ப பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.