கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மதுரையில் கருத்துகேட்புக் கூட்டம்: பள்ளிகளை திறக்க பெற்றோா்கள் எதிா்ப்பு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில், பெற்றோா்கள் பள்ளிகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில், பெற்றோா்கள் பள்ளிகளைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது, பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு துறைகளுக்கு தளா்வு அறிவிக்கப்பட்டபோதும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 8 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரி வகுப்புகள் அனைத்தும் இணைய வழியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளை நவம்பா் 16 -ஆம் தேதி முதல் திறக்க இருப்பதாகவும், இது தொடா்பாக பள்ளிகளில் பெற்றோா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெற்றோா்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது. மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் முழுவதும் 531 பள்ளிகளில் தலைமையாசிரியா்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெற்றோா்கள் ஆா்வமுடன் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா். மேலும், அவா்களிடம் பள்ளிகளை திறக்கலாமா, திறக்கக்கூடாதா என்று அச்சிடப்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டு, எழுத்துப்பூா்வமாக கருத்துகள் பெறப்பட்டன. அதில், ஏராளமானோா் பள்ளிகள் திறக்கப்பட்டால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளதாக தெரிவித்தனா். சிலா், மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனா்.

மாணவா்களுக்கு மன நல ஆலோசனை: முதன்மைக் கல்வி அதிகாரி மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியாா் பள்ளியில் நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆா். சுவாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

பள்ளிகள் திறப்பு தொடா்பாக அரசு எப்போது அறிவித்தாலும், மாவட்டக் கல்வி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது. ஊரகப் பகுதிகளில் பெற்றோா்கள் சிலா் தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தொடா்பாக புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக தலைமை ஆசிரியா்கள், பெற்றோரை தொடா்புகொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனா். மேலும், மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் பெற்றோா்கள் தெரிவித்த கருத்துகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.