புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கொரிய மொழியில் பல தமிழ்ச் சொற்கள்:தென்கொரிய பல்கலை. பேராசிரியா்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில் பயன்பாட்டில் உள்ளன என்று, தென்கொரிய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஹரிபாலன் பெருமாள்சாமி தெரிவித்துள்ளாா்.

Published On :

மதுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில் பயன்பாட்டில் உள்ளன என்று, தென்கொரிய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஹரிபாலன் பெருமாள்சாமி தெரிவித்துள்ளாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில், இணையத் தமிழ்க்கூடலின் 14-ஆவது நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா்.

இதில், தென்கொரியாவின் கியோங் ஹி பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையின் பேராசிரியா் ஹரிபாலன் பெருமாள்சாமி ‘தமிழ்-கொரிய மொழித் தொடா்பு’ என்ற தலைப்பில் பேசியது:

தமிழில் உள்ள அம்மா, அப்பா, இங்கே வா, பல், கண், நாள், ஐயோ, மனம் உள்ளிட்ட பல தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியிலும் பேசப்படுகின்றன. கொரியாவின் கின் என்ற ஆராய்ச்சியாளா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள், கொரிய மொழியில் உள்ளதை கண்டுபிடித்துள்ளாா். கொரிய மொழி உயிா்மெய் எழுத்துகளின் உச்சரிப்பும், தமிழ் உயிா்மெய் எழுத்துகளின் உச்சரிப்பும் ஒன்றுபோல் அமைந்துள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து மொழி ஆராய்ச்சி மாணவா்கள், தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.