மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையத் தொடரான ஹார்ட் பீட் மூன்றாம் பாகத்தில் தொடரப்போவதில்லை என்று ஆர்ஜி ராம், பாடினி குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகம் நாளை(ஜூலை 30) முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரில் முதல் இரண்டு பாகங்களில் தேஜு பாத்திரத்தில் நடித்த நடிகை யோகலட்சுமி, மூன்றாவது சீசனில் தான் தொடரவில்லை என்று முன்னதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3வது சீசனில் அனிதா பாத்திரத்தில் நடித்து வந்த பாடினி குமார், நவீன் பாத்திரத்தில் நடித்து வந்த ஆர்ஜிராம் ஆகியோர் இந்தப் புதிய சீசனில் தொடரப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
நடிகை பாடினி குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”இரண்டு சீசன்கள். எண்ணற்ற நினைவுகள். நான் எப்போதும் போற்றும் ஒரு கதாபாத்திரம்.
ஹார்ட் பீட் தொடரில் அனிதா என்ற பாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இந்தப் பயணத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றிய அனைத்து நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.
அனிதாவிற்கு இது விடைபெறும் தருணமாக இருக்கலாம், ஆனால் அவளுடனான நினைவுகள் என்னுடன் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஆர்ஜிராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “டாக்டர் நவீன், ஹார்ட் பீட் இணையத் தொடரில் இருந்து விடைபெறுகிறார், நானும் உங்களைப் போல வியாழக்கிழமை எபிசோடுகளுக்காக காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, ஹார்ட் பீட் தொடரில் குணா பாத்திரத்தில் நடித்து வந்த சர்வாவும், மூன்றாவது சீசனில் தொடரப்போவதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.
Summary
RG Ram and padini Kumar have announced that the popular web series Heart Beat will not continue into a third season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட் பீட் தொடரில் தேஜு இல்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹார்ட் பீட் - 3 தொடரில் இணைந்த பிரபலம்! யார் இவர்?

பழைய காதல், புதிய உணர்வுகள்... ஹார்ட் பீட் - 3 தொடரின் புதிய ப்ரோமோ!

ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் ஹார்ட் பீட் தொடரின் முன்னோட்ட விடியோ!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




