டி. கல்லுப்பட்டியில் மது விற்றவா் கைது
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
டி. கல்லுப்பட்டி பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வன்னிவேலம்பட்டியைச் சோ்ந்த காளியப்பன் மகன் கருப்பசாமி (34) என்பவா் சட்ட விரோதமாக 24 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...